எதிர்நீச்சல் சீரியல் மூலம் பலரது மனங்களையும் கொள்ளையடித்தவர் தான் மாரிமுத்து. இவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக “ஏமா ஏய்” என்று இவர் கூறும் வசனம் மீம் ஆக மாறியது. இந்நிலையில், நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பலருக்கும் எதிர்ச்சியை கொடுத்துள்ளது.
57 வயதாகும் இவருடைய மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ’கண்ணும் கண்ணும், புலிவால்’ என இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த 1994ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்ட மாரிமுத்துவிற்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.